Tuesday, December 18, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்


மிதுனம்: கவலைகள் மறையும் (2.12.2012 முதல் 21.6.2014 வரை ) 

சீரிய சிந்தனையும் நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுனராசி அன்பர்களே, யார் தயவும் இன்றி சொந்தக் காலில் நின்று முன்னேற வேண்டும் என  துடிப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்களது ராசியில் அயன- சயன-போக ஸ்தானத்தில் கேதுவும் 6ம் இடத்தில் ருண-ரோகஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது  லாபஸ்தானமான 11ம் இடத்திற்கும் ராகு பூர்வ புண்ணியஸ்தானமான 5ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு தைரியவீர்யஸ்தானமான மூன்றாம் இடத்தையும் களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.  கேது ராசியையும் பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தையும் பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார். 


கடந்த சில ஆண்டுகளாக உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்னைகளைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவையெல்லாம் தீர்ந்து ஒரு சுமுக மான சூழ்நிலை உருவாகப்போகிறது. சகோதர, சகோதரிகளிடத்தில் முழுமையான அன்பை எதிர்பார்க்கலாம்.  முயற்சிகளின் மூலம் புதிய வீடு வாய்ப்பு கிட்டும். திருமணம்  கைகூடும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் வசந்தம் வீசும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பி ன்னே நடைபெறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டே எடுக்கவும். தெய்வ அனுகூலம் இருப்பதால் எந்த  பிரச்னையும் இராது. தொழிற்கல்வி மற்றும் ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பொன்னான காலமிது. 


அதிகமாக முயற்சி எடுத்து  படித்தால் சாதனைகள் புரியலாம். விரும்பிய பாடத்தை எடுத்து படிப்பதற்கு மிகச் சரியான காலகட்டமிது. குடும்பப் பிரச்னைகளால் உங்கள் கல்விக்கு  தடைகள் வரக் கூடும். கவனமாக எதிர்கொள்ளுங்கள். நடனக் கலைஞர்கள் மற்றும் பிற கலைத்துறையைச் சார்ந்த தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிற மொழிகளில் நடிப்ப தற்கு ஏற்ற வாய்ப்புகள் வந்து சேரும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பணவர வும் இருக்கவே செய்யும். எழுத்தாளர்கள், சட்ட வல்லுனர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் கிடைக்கும். கற்பனை  வளம் அதிகரிக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது லாபம் கிடைக்கும். 


தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாபாரமும் நன்மை பயக்கும். பொருட் களை பதுக்கி வைத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடவேண்டாம்.  மற்றவர்களின் பிரச்னைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண் பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வோடு  மேல் அதிகாரிகளின் அனுசரணையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும். வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு  சரியான வேலை அமையும். 


பூர்வீக சொத்தான விவசாய நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு வீண் செலவுகள் வரலாம். வழக்கு வியாஜ்யங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை அவசியமாகிறது.  பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். பணியிடமாற்றம் உறுதிப்டுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன்  பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். 


புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை மிகு ந்த பாதுகாப்புடன் வைத்திருங்கள். பழைய வீடு, வாகனம் என சொத்துகள் வாங்குவீர்கள். அரசியலில் உள்ளவர்களும் பொதுவாழ்க்கையில் உள்ளவர் களும் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக  உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் அரவணைப்பும் உங்களின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாகவே இருக் கும். உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம். தந்தையாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். தலைவலி, வயிறு மற் றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வந்து செல்லும். தாயின் உடல்நலம் மேம்படும். சந்தோஷம் பெருகும். 


பரிகாரம்: 


புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைர வர் பூஜையில் கலந்து கொள்ளவும். 


சொல்ல வேண்டிய மந்திரம்: 


ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணமும் செய்யலாம். 


மலர் பரிகாரம்: 


புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி அல்லது மரிக்கொழுந்து  சாற்றி வழிபடவும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்



ரிஷபம்: பணம் குவியும்

பொறுமையும் நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் வல்லமை கொண்ட வர்கள். 
இதுவரை உங்களது ராசியில் கேது 7ம் இடத்திலும் களத்திர ஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது அயன-சயன-போகஸ்தானமான 12ம்  இடத்திற்கும் ராகு, ருண-ரோக ஸ்தானமான 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு சுகஸ்தானமான நான்காம் இடத்தையும் ஆயுள் ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தையும் அயனசயனபோக ஸ்தானமான பன்னிரண்டாமிடத்தையும்  பார்க்கிறார். கேது தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்தையும் ருணரோக ஸ்தானமான ஆறாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார். 

உடன்பிறந்தவர்கள் வகையில் நிலவி வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப் பற்றாக்குறை படிப்படியாகக் குறையும். வீண் செலவுகளைத் தவிர்ப் பது நலம். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடிவரும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும்  சிறந்த காலமாகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில் பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். நல்ல  மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.  வெளிநாடு சென்று பயில வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்குண்டான காலம் கனிந்து வரும்.  போட்டிகளில் வென்று பதக்கம் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. குறிப்பாக இசைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். பயணங்களால் பணம் குவியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும்.   முறையாக வரிகளை செலுத்திவிடுங்கள். வேலையாட்கள் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். வழக்கு வியாஜ்யங்களில் வெற்றி கிடைக்கும். வழக்கறி ஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்று சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு சீரான முன்னேற்றம் நிகழும். வேலை பார்த்து கொண்டே உப தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 

மேலதிகாரிகளிடம் அனுசரணையாக  நடந்து கொள்ளவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலைபளு அதிகரிக்கும். மன உளைச்சல் மற்றும் உடல் களைப்பை  தூக்கி எறிந்து விட்டு உழைக்க ஆரம்பியுங்கள். பேச்சில் கவனம் தேவை. பின்தங்கிய  நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அடியெ டுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். 

விவசாயிகளுக்கு சிறந்த லாபம் கிடைக்கும். கரும்பு, முந்திரி போன்ற பணப் பயிர்களில் அதிக மகசூல்  கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கலாம்.  விவசாயத்திற்குப் பயன்படும் உபகரணங்களை வாங்கும் காலகட்டமிது. பாகப்பிரிவினை மற்றும் நிலப்பிரச்னைகளில் உங்களுக்கு சுமுகமான தீர்வு  கிடைக்கும். 
கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களது உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. கணவர் அன்பாக கவனித்துக் கொள்வார். வேலைக்குச் செல்லும்  பெண்கள் உயர் பதவி வாய்ப்பைப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் தேவைப்பட்டால் ஒழிய கருத்துகளைத் தெரிவிக்காதீர்கள். நேர்த்திக் கடன் ஏதேனும்  இருந்தால் குலதெய்வத்திற்கு வேண்டிக்கொண்டு செய்வது நன்மை தரும். ஞானிகள், சித்தர்கள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். 

சிலருக்குத் திருமண யோகம் கூடிவரும். குழந்தைகளுக்கு வாழ்வில் முக்கியமாக கருதப்படும் வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் சந்தானபாக்கியம் கிட் டும். சொந்த ஊரில் உங்களின் நன்மதிப்பு உயரும். அரசியல், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நற்புகழ் கிடைக்கும். சிலர் பணத்தை இழக்க நேரி டலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியா மல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்புதும்புகள் வந்து சேரலாம்; கவனம் தேவை. உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். மன தில் சோர்வு அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை  கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: 

வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமைதோறும் வீட்டு பூஜையறையில்  தேங்காய் தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

மகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: 

வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு தாமரை மலரை சாற்றி வழிபடவும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- மேஷம்



மேஷம்: திருமண யோகம் உண்டு

எதற்கும் அஞ்சாத குணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் மேன்மையுடனும் கீர்த்தியுடனும்  விளங்குவீர்கள். இதுவரை உங்களது ராசிக்கு 2ம் இடத்தில் கேதுவும் 8ம் இடத்தில் ராகுவும் நின்றிருந்தார்கள். இனி கேது ராசிக்கும் ராகு 7ம் இடத்திற்கும் மாறுகிறார் கள். ராகு ராசியையும் பூர்வ புண்ணிய பஞ்சம ஸ்தானத்தையும் பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார். கேது தைரியவீர்ய ஸ்தானத் தையும் களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.

மேன்மையான குணக்குன்றுகளாய் விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசிப்படி இதுவரை கேது 2ம் இடமான தன-வாக்கு-குடும்ப ஸ்தானத் தில் இருந்து ராசிக்கும், ராகு 8ம் இடமான ஆயுள்ஸ்தானத்திலிருந்து 7ம் இடமான களத்திரஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளை வெளியிடும்முன்  நிதானம் அவசியம். திருமண முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, வரும் பங்குனி மாதத்திற்குப் பின் திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடுமனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

சிலருக்கு தூக்கம் வராது. தியானம், யோகா நலம் தரும்.  தாய்மாம னிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோ ருக்கு மிக நல்ல காலகட்டமிது. பணி நிரந்தரமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மற்ற வர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளை ஆராயவும்.   புதியதாக வாகனங்கள்  வாங்கும் போது விசாரித்து வாங்குங்கள்.  

மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம்  பெறலாம். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.  தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கி ரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள்  பெறுவது அவசியமாகிறது. விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல், கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும். விவசாயத்திற்குத் தேவையான  புதிய கருவிகளை வாங்குவதற்கு அரசின் மானியம் கிடைக்கும். அதிக செலவைத் தரும் பயிர்களைப் பயிரிடும் முன் தகுந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகள் பெறவும்.

கால்நடைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கூடுதல் சுமைகள் வந்து சேரும். உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக கர்ப்பிணிப் பெண் கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்து வம், சமையல் கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும்.

மாணவர்கள் மேற்படிப்பு சம்பந்தமாக வெளியூர் சென்று தங்கிப் பயிலும் வாய்ப்பு கிட்டும். முயற்சிகள் எடுத்து படித்தால் வெற்றி உங்களை வந்தடையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத் திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். பத்திரிகை  தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவி யும் பொறுப்பும் வந்து சேரும். வீண் அலைச்சலும் வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். குழந்தைகள் மற்றும் தம்பதிகளின் உடல் நல னில் அக்கறை காட்டவும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமை தோறும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கித் தரவும். முடிந்த போது நவகிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு சாதமும் குதிரைக்கு கொள்ளும் கொடுக்கலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

விநாயகர் அகவலும் கந்தர் சஷ்டி கவசமும் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: 

செவ்வாய்தோறும் செவ்வரளிப் பூ வாங்கி அம்மனுக்கு மாலையாக சாத்தி வழிபடவும். சனிக்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயக ருக்கு அர்ப்பணிக்கவும்.

Monday, December 17, 2012

வாழ்க்கை பற்றிய இயற்கையின் உண்மை!!!


ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான். அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் "தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார். அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. "என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும். அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும். அதையே சந்ததியினரும் பின்பற்றுவர். ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார். 



Gangnam Style சின்னஞ் சிறுசுகளையும் விட்டு வைக்கவில்லை..!

http://www.youtube.com/watch?v=VL0sD0Iyjzo

சிரிக்கும் நேரம்


வாழ்க்கையின் சுமைகளைக் குறைப்பது சிரிப்பு மட்டுமே!!!
சிரிச்சு சந்தோஷமாக இருங்கள்.

ரீச்சர்: நீ பெரியவனாகி என்ன பண்ணப் போறாய்?
மாணவன்: கல்யாணம்....
ரீச்சர்: அது இல்ல நீ என்னவாக விரும்புறாய்?
மாணவன்: Husband ஆக...
ரீச்சர்: அதில்லை, உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறாய்?
மாணவன்: Wife…..
ரீச்சர்: Oh No,உங்க Parents க்கு என்ன பண்ணப் போறாய்?
மாணவன்: மருமகள் தேடுவேன்....
ரீச்சர்: Stupid, உங்க அப்பா உங்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்?
மாணவன்: பேரக்குழந்தைகள்....
ரீச்சர்: ஐயோ கடவுளே!! டேய் உன் வாழ்க்கை லட்சியம் என்ன?
மாணவன்: நாம் இருவர்!!! நமக்கு இருவர்!!!!

தமிழர்கள் சூட்டிய கடல் பெயர்கள்


"பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of Erythrean sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் கடல் வாணிபம் குறித்த முக்கிய வரைபடம் குறிக்க பட்டுள்ளது . எரித்ரயென் கடல் என்பது இன்று நாம் சொல்லும் இந்து மா சமுத்திரம் . இந்து மா சமுத்திரம் வழியாக கடல் வாணிபத்தை குறிக்கும் வரைபடம் அது. அகவே முதலாம் நூற்றாண்டில் எரித்ரயென் கடல் என்று இந்து மா சமுத்திரம் அழைக்கப்பட்டது உறுதி ஆகிறது. இப்பொழுது "எரித்ரயென் சீ" என்ற வார்த்தையின் தன்மையை ஆராயும் பொழுது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

பெயர் : எரித்ரயென் சீ
பெயர் காரணம் : அந்த கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அது அழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம் அந்த பூஞ்சையின் அறிவியல் பெயர் (Trichodesmium erythraeum Algae) ட்ரைகோதேசமியும் எரித்ரயெயும் பூஞ்சை. இதனால் இந்தவகை பூஞ்சை வளரும் கடல் என்பதால் இந்த கடல் அப்பெயர் பெற்றதாக கூறபடுகிறது.

என் கேள்விகள் :
இந்த வகை பூஞ்சை முதன் முதலாக கடல் மாலுமி குக்(Captain Cook) என்பவரால் 1770 ஆம் ஆண்டு தன பயணத்தின் பொழுது கவனித்து பின்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அறிவியல் பெயரிடப்பட்டது . அப்படி இருக்குமெனில் முதலாம் நூற்றாண்டில் உள்ள வரை படத்தில் எப்படி அந்த பெயர் இடம்பெற்றது ???

பின்பு இதற்கு தமிழ் விளக்கத்தை பார்த்தால் :
Erthraean sea = Ery + Thraen sea
எரித்ரயென் = எரி + த்ரயென்
Ery or Eri (எரி) = எரி என்பதன் அர்த்தம் நெருப்பு (burning or firing red in colour)

Thirai or Tharai- (திரை) = திரை என்பதன் பொருள் ''திரைகடல்'' ''அலைகடல்'' என்ற வார்த்தையில் இருந்து புரியும்(a screen or a wave)

எரி+திரை = எரிதிரை > எரித்ரை > எரித்ரயென் கடல்

Eri + thirai = Erithirai > Erythirai > Erythraean Sea

''எரியும் திரைகடல்'' என்று அழகாக சொல்லப்பட்ட இந்த கடலின் பெயர் காலபோக்கில் மறைந்து இந்து மா கடல் என்று மாற்றப்பட்டுள்ளது