Tuesday, December 18, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்


மிதுனம்: கவலைகள் மறையும் (2.12.2012 முதல் 21.6.2014 வரை ) 

சீரிய சிந்தனையும் நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுனராசி அன்பர்களே, யார் தயவும் இன்றி சொந்தக் காலில் நின்று முன்னேற வேண்டும் என  துடிப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்களது ராசியில் அயன- சயன-போக ஸ்தானத்தில் கேதுவும் 6ம் இடத்தில் ருண-ரோகஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது  லாபஸ்தானமான 11ம் இடத்திற்கும் ராகு பூர்வ புண்ணியஸ்தானமான 5ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு தைரியவீர்யஸ்தானமான மூன்றாம் இடத்தையும் களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.  கேது ராசியையும் பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாமிடத்தையும் பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார். 


கடந்த சில ஆண்டுகளாக உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்னைகளைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவையெல்லாம் தீர்ந்து ஒரு சுமுக மான சூழ்நிலை உருவாகப்போகிறது. சகோதர, சகோதரிகளிடத்தில் முழுமையான அன்பை எதிர்பார்க்கலாம்.  முயற்சிகளின் மூலம் புதிய வீடு வாய்ப்பு கிட்டும். திருமணம்  கைகூடும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மீண்டும் வாழ்வில் வசந்தம் வீசும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பி ன்னே நடைபெறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டே எடுக்கவும். தெய்வ அனுகூலம் இருப்பதால் எந்த  பிரச்னையும் இராது. தொழிற்கல்வி மற்றும் ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பொன்னான காலமிது. 


அதிகமாக முயற்சி எடுத்து  படித்தால் சாதனைகள் புரியலாம். விரும்பிய பாடத்தை எடுத்து படிப்பதற்கு மிகச் சரியான காலகட்டமிது. குடும்பப் பிரச்னைகளால் உங்கள் கல்விக்கு  தடைகள் வரக் கூடும். கவனமாக எதிர்கொள்ளுங்கள். நடனக் கலைஞர்கள் மற்றும் பிற கலைத்துறையைச் சார்ந்த தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிற மொழிகளில் நடிப்ப தற்கு ஏற்ற வாய்ப்புகள் வந்து சேரும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பணவர வும் இருக்கவே செய்யும். எழுத்தாளர்கள், சட்ட வல்லுனர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு விருதுகள் கிடைக்கும். கற்பனை  வளம் அதிகரிக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது லாபம் கிடைக்கும். 


தண்ணீர் சம்பந்தப்பட்ட வியாபாரமும் நன்மை பயக்கும். பொருட் களை பதுக்கி வைத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடவேண்டாம்.  மற்றவர்களின் பிரச்னைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண் பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வோடு  மேல் அதிகாரிகளின் அனுசரணையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும். வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு  சரியான வேலை அமையும். 


பூர்வீக சொத்தான விவசாய நிலத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு வீண் செலவுகள் வரலாம். வழக்கு வியாஜ்யங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை அவசியமாகிறது.  பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். பணியிடமாற்றம் உறுதிப்டுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன்  பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். 


புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால் அவற்றை மிகு ந்த பாதுகாப்புடன் வைத்திருங்கள். பழைய வீடு, வாகனம் என சொத்துகள் வாங்குவீர்கள். அரசியலில் உள்ளவர்களும் பொதுவாழ்க்கையில் உள்ளவர் களும் மிகவும் சிறப்பான பலன்களைக் காண்பர். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். அதே வேளையில் அதிகமாக  உழைக்க வேண்டியதிருக்கும். நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் அரவணைப்பும் உங்களின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாகவே இருக் கும். உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மருத்துவ செலவு அதிகரிக்கலாம். தந்தையாரின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். தலைவலி, வயிறு மற் றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வந்து செல்லும். தாயின் உடல்நலம் மேம்படும். சந்தோஷம் பெருகும். 


பரிகாரம்: 


புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைர வர் பூஜையில் கலந்து கொள்ளவும். 


சொல்ல வேண்டிய மந்திரம்: 


ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணமும் செய்யலாம். 


மலர் பரிகாரம்: 


புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி அல்லது மரிக்கொழுந்து  சாற்றி வழிபடவும்.

No comments:

Post a Comment