ரிஷபம்: பணம் குவியும்
பொறுமையும் நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள்
அமைதியாக இருந்து எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் வல்லமை கொண்ட வர்கள்.
இதுவரை உங்களது ராசியில் கேது 7ம்
இடத்திலும் களத்திர ஸ்தானத்தில் ராகுவும் இருந்தார்கள். இனி கேது
அயன-சயன-போகஸ்தானமான 12ம் இடத்திற்கும் ராகு, ருண-ரோக ஸ்தானமான 6ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு சுகஸ்தானமான நான்காம்
இடத்தையும் ஆயுள் ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தையும் அயனசயனபோக ஸ்தானமான
பன்னிரண்டாமிடத்தையும் பார்க்கிறார். கேது தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்தையும் ருணரோக ஸ்தானமான
ஆறாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.
உடன்பிறந்தவர்கள் வகையில் நிலவி வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பணப்
பற்றாக்குறை படிப்படியாகக் குறையும். வீண் செலவுகளைத் தவிர்ப் பது நலம். சுப
நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடிவரும். புதியதாக வீடு,
வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த
காலமாகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,
பையோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியாலஜி சம்பந்தப்பட்ட துறைகளில்
பயில்வோருக்கு மிகச் சிறப்பான காலமாகும். நல்ல மதிப்பெண்கள்
கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு சென்று பயில வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்குண்டான
காலம் கனிந்து வரும். போட்டிகளில் வென்று பதக்கம் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. குறிப்பாக இசைத்
துறையைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். பயணங்களால் பணம்
குவியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். முறையாக
வரிகளை செலுத்திவிடுங்கள். வேலையாட்கள் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். வழக்கு
வியாஜ்யங்களில் வெற்றி கிடைக்கும். வழக்கறி ஞர்கள், ஆசிரியர்கள்,
மருத்துவர்கள் போன்று சேவைத்துறையில் இருப்பவர்களுக்கு சீரான
முன்னேற்றம் நிகழும். வேலை பார்த்து கொண்டே உப தொழில் செய்பவர்களுக்கு லாபம்
கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து
கொள்ளவும். உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வேலைபளு
அதிகரிக்கும். மன உளைச்சல் மற்றும் உடல் களைப்பை தூக்கி
எறிந்து விட்டு உழைக்க ஆரம்பியுங்கள். பேச்சில் கவனம் தேவை. பின்தங்கிய
நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அடியெ டுத்து வைக்கப்
போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து
விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்களின் மீதான அவப்பெயர்
மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு சிறந்த லாபம் கிடைக்கும். கரும்பு, முந்திரி
போன்ற பணப் பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கலாம்.
விவசாயத்திற்குப் பயன்படும் உபகரணங்களை வாங்கும் காலகட்டமிது.
பாகப்பிரிவினை மற்றும் நிலப்பிரச்னைகளில் உங்களுக்கு சுமுகமான தீர்வு
கிடைக்கும்.
கருவுற்றிருக்கும் பெண்கள் தங்களது உடல்நலனில் அக்கறை காட்டுவது
நல்லது. கணவர் அன்பாக கவனித்துக் கொள்வார். வேலைக்குச் செல்லும் பெண்கள்
உயர் பதவி வாய்ப்பைப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் தேவைப்பட்டால் ஒழிய கருத்துகளைத்
தெரிவிக்காதீர்கள். நேர்த்திக் கடன் ஏதேனும் இருந்தால்
குலதெய்வத்திற்கு வேண்டிக்கொண்டு செய்வது நன்மை தரும். ஞானிகள், சித்தர்கள்,
முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
சிலருக்குத் திருமண யோகம் கூடிவரும். குழந்தைகளுக்கு வாழ்வில்
முக்கியமாக கருதப்படும் வேலைவாய்ப்பு, திருமணம் மற்றும் சந்தானபாக்கியம் கிட்
டும். சொந்த ஊரில் உங்களின் நன்மதிப்பு உயரும். அரசியல், பொது
வாழ்வில் இருப்பவர்களுக்கு நற்புகழ் கிடைக்கும். சிலர் பணத்தை இழக்க நேரி டலாம்.
நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை
எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால்
அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியா மல் போகலாம். சிற்சில நேரங்களில்
வம்புதும்புகள் வந்து சேரலாம்; கவனம் தேவை. உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். மன தில்
சோர்வு அவ்வப்போது ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். தந்தை
மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை கவனம்
செலுத்தவும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று
நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமைதோறும் வீட்டு பூஜையறையில் தேங்காய்
தீபம் ஏற்றவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
மகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்:
வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு தாமரை மலரை சாற்றி
வழிபடவும்.
No comments:
Post a Comment