Tuesday, December 18, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- மேஷம்



மேஷம்: திருமண யோகம் உண்டு

எதற்கும் அஞ்சாத குணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் மேன்மையுடனும் கீர்த்தியுடனும்  விளங்குவீர்கள். இதுவரை உங்களது ராசிக்கு 2ம் இடத்தில் கேதுவும் 8ம் இடத்தில் ராகுவும் நின்றிருந்தார்கள். இனி கேது ராசிக்கும் ராகு 7ம் இடத்திற்கும் மாறுகிறார் கள். ராகு ராசியையும் பூர்வ புண்ணிய பஞ்சம ஸ்தானத்தையும் பாக்கியஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் பார்க்கிறார். கேது தைரியவீர்ய ஸ்தானத் தையும் களத்திரஸ்தானமான ஏழாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் பார்க்கிறார்.

மேன்மையான குணக்குன்றுகளாய் விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசிப்படி இதுவரை கேது 2ம் இடமான தன-வாக்கு-குடும்ப ஸ்தானத் தில் இருந்து ராசிக்கும், ராகு 8ம் இடமான ஆயுள்ஸ்தானத்திலிருந்து 7ம் இடமான களத்திரஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளை வெளியிடும்முன்  நிதானம் அவசியம். திருமண முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, வரும் பங்குனி மாதத்திற்குப் பின் திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடுமனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

சிலருக்கு தூக்கம் வராது. தியானம், யோகா நலம் தரும்.  தாய்மாம னிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும். ஓட்டுனர்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலை செய்வோ ருக்கு மிக நல்ல காலகட்டமிது. பணி நிரந்தரமாகும். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணி செய்வோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மற்ற வர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளை ஆராயவும்.   புதியதாக வாகனங்கள்  வாங்கும் போது விசாரித்து வாங்குங்கள்.  

மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம்  பெறலாம். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.  தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கி ரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனைகள்  பெறுவது அவசியமாகிறது. விவசாயிகள் சிறப்புடன் இருப்பார்கள். நெல், கோதுமை போன்ற பயிர்கள் லாபம் தரும். விவசாயத்திற்குத் தேவையான  புதிய கருவிகளை வாங்குவதற்கு அரசின் மானியம் கிடைக்கும். அதிக செலவைத் தரும் பயிர்களைப் பயிரிடும் முன் தகுந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகள் பெறவும்.

கால்நடைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கூடுதல் சுமைகள் வந்து சேரும். உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக கர்ப்பிணிப் பெண் கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்து வம், சமையல் கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும்.

மாணவர்கள் மேற்படிப்பு சம்பந்தமாக வெளியூர் சென்று தங்கிப் பயிலும் வாய்ப்பு கிட்டும். முயற்சிகள் எடுத்து படித்தால் வெற்றி உங்களை வந்தடையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத் திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். பத்திரிகை  தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவி யும் பொறுப்பும் வந்து சேரும். வீண் அலைச்சலும் வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். குழந்தைகள் மற்றும் தம்பதிகளின் உடல் நல னில் அக்கறை காட்டவும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். சனிக்கிழமை தோறும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கித் தரவும். முடிந்த போது நவகிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு சாதமும் குதிரைக்கு கொள்ளும் கொடுக்கலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

விநாயகர் அகவலும் கந்தர் சஷ்டி கவசமும் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: 

செவ்வாய்தோறும் செவ்வரளிப் பூ வாங்கி அம்மனுக்கு மாலையாக சாத்தி வழிபடவும். சனிக்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயக ருக்கு அர்ப்பணிக்கவும்.

No comments:

Post a Comment